ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: வாடிக்கையாளர்கள் புகார்!!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (22:00 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. 


 
 
இந்நிலையில், தற்போது ஐபோன X வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களது ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். 
 
இந்த கோடு ஹார்டுவேர் கோளாறு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழைதான் இதற்கு காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களது பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றனர். 
 
ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் அல்லது ரீஸ்டோர் செய்தாலும் பச்சை கோடு டிஸ்ப்ளேவில் இருந்து மறையவில்லை என கூறப்படுகிறது. 
 
இந்த பிரச்சனையை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்தது. ஐபோன் X ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 முன்னாள் அமைச்சர்களுக்கு குறி.. வேட்டையை தொடங்குகிறார் அருண் ஐபிஎஸ்..

என்எல்சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சேர்ந்து உருவாக்கும் புதிய நிறுவனம்.. தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்...

மாஸ்டர் ரெய்டு ஸ்டார்ட்!.. திமுக அமைச்சர்களின் ஊழலை தோண்டும் முதல்வர் விஜய்!..

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. சாலை, மெட்ரோ இரண்டுக்கும் ஒரே இரண்டடுக்கு மேம்பாலம்.. தமிழக அரசு திட்டம்..

விஜய்க்கு ஏன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லல?.. ரஜினி கொடுத்த பதில்!...

அடுத்த கட்டுரையில்
Show comments