Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை உயரப்போகும் ஜியோ ரீசார்ஜ் கட்டணம்: ஷாக் கொடுக்கும் அம்பானி!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (13:24 IST)
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முகேஷ் அம்பானி சமீபத்தில் நடைபெற்ற 42 வது ஆண்டு ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்ட பல திட்டங்கள் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைந்துள்ளது. 
 
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் விலை சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், ஜியோ இந்தியாவில் அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜியோவின் இலக்கு 500 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அளவிலான எண்ணிக்கையை அடைய ஜியோ நிறுவனத்திற்கு நிதி தேவைப்படும். இந்த நிதியை திரட்ட ஜியோ ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என தெரிகிறது. 
 
அதோரு கடன் இல்லா நிறுவனமாக மாறவும் மற்ற நிறுவனங்களில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யவும் தேவைப்படும் நிதியை மொபைல் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக நிலையில், விலை உயர்வுக்கான சாத்தியகூறுகள் அதிகமாவே இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments