Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (14:02 IST)
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பீச்சர் போன் ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு ஆகஸ்டு 24 ஆம் தேதி நடைபெற்றது.


 
 
ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்கள் மட்டும் பல்வேறு விற்பனை மையங்களிலும் ஜியோபோன் முன்பதிவு நடைபெற்றது. இதை தவிர்த்து ஆன்லைனிலும் முன்பதிவு நடத்தப்பட்டது.
 
ஜியோ போனை வாங்க அதிக அளவில் முன்பதிவு செய்துவந்ததால், முன்பதிவு நிறுத்தி வைத்தது. மேலும், முன்பதிவு மீண்டும் துவங்கும் போது தெரிவிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்ட்டிருந்தது.
 
இந்நிலையில், இரண்டாவது கட்ட ஜியோ போன் புக்கிங் தொடங்க உள்ளது. தீபாவளிக்குப் பிறகு, இரண்டாவது கட்ட ஜியோ போன் விற்பனைக்கான புக்கிங் தொடங்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
 
அதோடு, முதற் கட்ட புக்கிங்கில் ஜியோ போனை 6 மில்லியன் பேர் புக் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீபாவளிக்குள் மொபைல் கிடைத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது, 
 
மேலும், ஜியோ ரிசார்ஜ் கட்டணத்திலும் மாற்றங்கள் வரும் 19 ஆம் தேதி கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments