Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் விம்சோப் டெலிவர் செய்த பிளிப்கார்ட்!!

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (12:09 IST)
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக 6 விம்சோப்பை அனுப்பிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆன்லைன் ஸாப்பிங் தளங்களில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நம்பகத்தன்மை உடையதாக கருதப்படுகிறது. ஆனால், அங்கும் சில குளறுபடிகள் நடைபெருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறுவனங்கள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.
 
அந்த வகையில், சமீபத்தில் நடந்துள்ள சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சயனி பேனர்ஜி என்ற பெண் ஒருவர் பிளிப்கார்ட்டில் கடந்த 26 ஆம் தேதி ஓப்போ F5 Gold (32 GB) ஆர்டர் செய்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.19,990 கொடுத்துள்ளார்.
 
ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது 6 விம் சோப்புகள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு, ஓப்போ ஸ்மார்ட்போனை ரூ.19,990-க்கு ஆர்டர் செய்தால் 6 சோப் கொடுக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் தரம் குறைந்துவிட்டது.
 
இதனை எதிர்த்து புகார் அளித்தற்கு என்னை 10 ஆம் தேதி வரை காத்திருக்குமாரு கூறியுள்ளனர். இதுவே எனது கடைசி பிளிப்கார்ட் ஆர்டர். இனி பிளிபகார்ட் தளத்தில் எந்த பொருட்களையும் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments