Publish Date: Sat, 28 Mar 2026 (12:04 IST)
Updated Date: Sat, 28 Mar 2026 (12:08 IST)
உடல் ஆரோக்கியம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். அதனால்தான் ஆரோக்கியமே சொத்து என முன்னோர்கள் சொன்னார்கள். ஏழையாக கூட இருந்து விடலாம்.. வறுமையில் கூட வாடலாம்.. பணமில்லாமல் பல பிரச்சினைகள் கூட சந்திக்கலாம்.. ஆனால் உடலில் ஆரோக்கியம் இல்லையென்றால் பணம் இருந்தும் பலனில்லை.
பல பணக்காரர்கள் பணமிருந்தும் உடலில் ஆரோக்கியம் இல்லாமல் வாழ்வதை பார்க்க முடியும். மனிதனின் உடல் ஒரு எந்திரம் போலத்தான் செய்ல்படும். தேவைப்படும் நேரத்தில் எல்லா வகைகளிலும் மனிதனுக்கு பல வகையான குறிப்புகளை உணர்த்தும். ஆனால் மனிதர்கள்தான் அதை சரியாக புரிந்து நடந்து கொள்வதில்லை. மனித உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் பற்றி தெரிந்து கொண்டால் நமக்கு நோய் மீது பயமே வராது.. அந்த வகையில் சிலவற்றை சில அறிகுறிகளை பார்ப்போம்:
வயிற்றில் சத்தம் கேட்டால் செரிமான மண்டலம் நன்றாக செயல்படுகிறது என அர்த்தம்..
குளிந்த நிலையில் குளிக்க விருப்பம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என அர்த்தம்...
காலையில் அலாரம் வைக்காமல் சுலபமாக எழ முடிகிறது என்றால் ஹார்மோன்கள் சமநிலையில் உள்ளது என அர்த்தம்..
சீக்கிரம் உடலில் வியர்வை வெளியேறுகிறது என்றால் உடல் டிடாக்சின் பணியை சரியாக செய்கிறது என அர்த்தம்..
வெயிலில் தும்மல் வந்தால் நரம்பு மண்டலம் வலுவாக உள்ளது என அர்த்தம்.
அடிபட்ட புண் சீக்கிரம் ஆறினால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சரியாக வேலை செய்கிறது என அர்த்தம்..
வாயில் அதிக சலிவு சுரப்பது வாய் நீர் ஆரோக்கியத்தின் அடையாளம்..
தினமும் சரியான நேரத்தில் மலம் சிக்கல் இல்லாமல் வெளியேறினால் குடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது என அர்த்தம்..
Mahendran
Publish Date: Sat, 28 Mar 2026 (12:04 IST)
Updated Date: Sat, 28 Mar 2026 (12:08 IST)