Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Mahendran
செவ்வாய், 13 மே 2025 (19:07 IST)
வேர்க்கடலை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய, ஆனால் பல பயன்கள் கொண்ட உணவாகும். இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், இதில் இருக்கும் அதிக அளவு சத்துக்களே.
 
100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 567 கலோரி, 25 கிராம் புரதம், 49 கிராம் கொழுப்பு மற்றும் பலவகைத் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி வகைகள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.
 
வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மெல்ல செய்கிறது. இதனால், உணவுக்குப் பிறகு உடலில் உள்ள சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கும். இதே நேரத்தில், மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது என்பதும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
 
இதய ஆரோக்கியத்திற்கு இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடல் அழற்சியைத் தடுக்க உதவுகின்றன.
 
வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. வறுத்ததைக் காட்டிலும், வேகவைத்ததில்தான் 4 மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. ஆனால், வேர்க்கடலைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
 
இதை தோலுடன் சேர்த்து, உப்பும் எண்ணெயும் இல்லாமல் சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments