Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் 10 நாட்கள் பங்குனி உத்தர திருவிழா

sabarimala
Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (21:48 IST)
கேரளாவில் உள்ள சபரிமலையில்   10 நாட்கள் பங்குனி உத்தர திருவிழா நடைபெறவுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்தர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்தர திருவிழா இன்று தொடங்கியது.

இதற்கு முன்ங்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்ட  நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

மேலும், இன்று அதிகாலையில் கோவில்  நடை திறக்கப்பட்டு, சிறப்பு  நடக்கப்பட்டது.

எனவே, காலையில் தந்திரி கண்டரரு ராஜிவரரூ, மேல் சாந்தி ஜெயராமன், நம்பூதரி, ஆகியோர் கொடிக்கு பூஜைகள் செய்தனர்.

இதையடுத்து பங்குனி உத்தர விழா கொடி ஏற்றப்பட்டது. இதில், மக்கள்  கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், 10 நாட்கள் சிறப்பு பூஜைகளும் திருவிழாவும் நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் கோவிலில் உற்சவ பலியும் நடகவுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி சரங்குத்தி பள்ளிவேட்டையும் நடக்கவுள்ளது. அதன்பின்னர், மறு நாள் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கவுள்ளது, ஆறாட்டு விழாவுக்குப் பின் மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்விழாவுக்கு வருபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமென்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் உள்ள தீர்த்தங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும்...!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (16.05.2025)!

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments