Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ ஷீரடி சாய் நாதரின் அற்புத பொன்மொழிகள் !!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:03 IST)
உன்மனதில் உள்ள குமுறலை நான் அறிவேன் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் என்கிறாயா?, கஷ்டம் யாருக்கு இல்லை, படைத்து காக்கும் இறைவனுக்கும் கஷ்டம் இருக்கிறது.


நீ முந்தைய கர்ம வினையால் அவதிபடும் போது, என் நாமத்தை உச்சரிக்கும் போது யாகத்தில் எரிகின்ற தீ போல் உன் கர்ம வினைகள் எரிந்துவிடும்.

என் நாமமே உனக்கு பாதுகாப்பு கவசமாய் இருக்கும். வேறு எதுவும் உன்னை தீண்டாது. முட்களால் குத்தி காயப்பட்டு உன் பாதம் இனி மேல் மலர் மேல் நடக்க போகிறது.

நீ ஒரு காரியத்திற்காக போகிறாய் என்றால் உனக்கு முன்னரே சென்று உன் தேவையை பூர்த்தி செய்து காரியத்தை முடித்து வைத்து இருப்பேன். அதனால் நீ மகுடமாய் உயர போகும் காலம் வந்து விட்டது, நீ தேடிய அலைந்தது எல்லாம் இனி உன் கையில் வந்து சேரும். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே.

உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது, அழுகையில் என் கண்ணீரும் இருக்கிறது.

உன் கோபத்தில் உன்னை அமைதியாக்கி உன்னை நல்வழி படுத்த வேண்டும் என்ற பொறுப்பும் எனக்கு உள்ளது. நீ எல்லா செல்வ வளங்களையும் பெறுவாய்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்! குவியப்போகும் பக்தர்கள்! - சிறப்பு பேருந்துகள், ஏற்பாடுகள் தீவிரம்!

இந்த ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்!- இன்றைய ராசி பலன்கள் (02.05.2025)!

சங்கரன்கோவில், சங்கர நாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா! கோலாகலமாக நடந்த கொடியேற்றம்! - முழு விழா அட்டவணை!

அடுத்த கட்டுரையில்
Show comments