Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (22:51 IST)
கரூர் வெங்கமேடு மஞ்சள் மாதா ஆலயத்தில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு  கரூர்மாநகராட்சிக்குட்பட்டவெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சத்ய ஜோதி ஐயப்பன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான, அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மாதா சுவாமிக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு ஸ்ரீ காத்யாயனி தேவி அலங்காரம் செய்யப்பட்டது.

ஆலய அர்ச்சகர் ஸ்ரீ சிவஹர்சன், வேதமந்திரங்கள் முழங்க, லட்சார்ச்சனைகள் முழங்க, அம்மனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் நாக ஆரத்தி, கலச ஆரத்தி, கற்பூர ஆரத்திகளை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அளவில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சத்ய ஜோதி ஆலயத்தில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மஞ்சள் மாதாவிற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆடி மாத முதல் வெள்ளியை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகேஸ்வரசுவாமியை வழிபடும் சூரியன்.. பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றியால் மகிழ்ச்சி உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (24.04.2025)!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்!

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்களுடன் இணைந்து செய்யும் காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (23.04.2025)!

வைத்தீஸ்வரன் கோவிலில் குலதெய்வ வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments