Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பச்சைக்கற்பூரம் !!

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பச்சைக்கற்பூரம் !!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (17:30 IST)
நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே மனம் மகிழ்ச்சி அடைய செய்யும்  அதற்கு தேவைப்படுவது பணமே ஆகும். வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து கஷ்டங்களையும் தாங்கி மேல்நிலைக்கு வர தெய்வ நம்பிக்கையுடன் வழிபாடு செய்வதே சிறந்த முறையாகும்.


தெய்வ வழிபாடு நாம் செய்யும் போது அதற்கான ஆற்றலை நாம் பெறுவதுடன் சில தாந்த்ரீக முறையை பின்பற்றினால் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

நம் வீட்டில் பணத்தை அதிகரிக்கச் செய்வதில் பச்சை கற்பூரம் சிறந்த பரிகாரமாகும் மேலும் தெய்வீக  ஆற்றலைக் கொடுக்கும் தன்மை உடையதாகும்.

நம் புராணங்களில் திருமால் நடத்திய லீலையில் திருமாலுக்கு உதடு கீழ்ப்பகுதியில் தாவாங்கட்டை  பகுதியில் ரத்தம் வந்துகொண்டே இருந்தது அதற்கு மருந்தாக பச்சை கற்பூரத்தை வைத்தனர் ரத்தம் நின்று போனது.

பச்சைக் கற்பூரத்தை வீட்டில் வைத்தாலே நேர்மறையான ஆற்றல் அதிகம் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. தூளாக்கிய பச்சை கற்பூரத்தை தீபம் ஏற்றும் நல்லெண்ணெய் பாட்டிலுக்குள் போட்டு விட வேண்டும். சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொண்டால் போதும்.

இந்த எண்ணெய்யில் தீபம் ஏற்றும் போது, ஒரு நல்ல நறுமணம் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும், எதிர்மறை ஆற்றலும் தானாகவே விலகும்.

வளர்பிறை நாட்களில் மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து சிவப்பு பருத்தி துணியில் முடித்து நாம் வழிபடும் பூஜை அறையில் மகாலட்சுமியின் முன் வைத்து மேலும் கற்கண்டு வாழைப்பழம் வைத்து  நெய்வேத்தியம் படைத்து ஓம் மகாலட்சுமியை நமஹ என்று சில மணி நேரம் தியானத்தில் இருந்தால் உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்க செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!