கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:09 IST)
கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்
வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 
 
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த புண்ணிய தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்
 
இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மற்றும் அனைத்து நாட்களிலும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரியும் நரசிம்மரை தரிசிப்பதற்காக ஆந்திரா கர்நாடகா உள்பட பல வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர் 
 
1305 படிக்கட்டுகளில் நடந்து சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதல் ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்: வீட்டிலிருந்தே லட்சங்களில் லாபம் ஈட்டலாம்!..

நாளை சந்திர கிரகணம்!. என்ன செய்ய வேண்டும்?..

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி”.. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு! ..

சேலம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!.. குவிந்த பக்தர்கள்!...

ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை ..

அடுத்த கட்டுரையில்
Show comments