Publish Date: Mon, 08 May 2023 (22:01 IST)
Updated Date: Mon, 08 May 2023 (22:04 IST)
திருமலையில் வரும் 14 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நாட்கள் நடக்கும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தின் ஒருபகுதியாக வரும் 16 ஆம் தேதி திருமலையில் உள்ள தர்ம்கிரி வேத விஞ் ஞான பீடத்தில் அகண்ட சம்பூர்ண சுந்தரகாண்ட பாராயணத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தவுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடக்கும் நாளன்று காலை 5.50 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும் எனவும் இந்த சுலோகங்களைக் கூற 67 வேதபண்டிதர்கள் ஓதுவார்கள் என்று கூறினார்.
இந்த நிகச்சியில் இவர்களுடன், எஸ்வி. வேத பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், எஸ்வி,உயர் வேத ஆய்வு மையம் உள்லிட்ட பக்தர்களுடம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மனித குலத்தின் நலன் வேண்டி ஹோமம் நடத்தப்ப்படும் என்று தேவஸ்தான் கூறியுள்ளது.