Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்யும்போது அம்மி மிதித்து அருந்தது பார்ப்பது ஏன் தெரியுமா?

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (18:47 IST)
அம்மி மிதித்து அருந்ததி காணும் பழக்கம் திருமண நிகழ்வில் உள்ளது. இதற்கு காரணம், அருந்ததி நட்சத்திரம் பொதுவான கண்களுக்கு வெறும் ஒரு நட்சத்திரமாகத் தோன்றுகிறது. ஆனால், அதை நுண்ணோக்கு கருவியால் பார்த்தால், அது இரு நட்சத்திரங்களாக காட்சியளிக்கிறது. இதையே "இரு உடல், ஒரு உயிர்" என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, கணவன் மற்றும் மனைவி என்ற இருவரும், உடலியல் ரீதியில் இருவர் என்றாலும், ஒரே உயிராக இணைந்திருப்பதையும், அன்யோன்யமாக வாழ்வதையும் 16 செல்வங்களுடன் பெற்று வாழவேண்டும் என்பதே இந்த பழக்கத்தின் பின்னணி உள்ள பாடமாகும்.
 
திருமணம் என்பது வெறும் இனபெருக்கத்தை நோக்கி செல்கின்ற செயல் என்பதை அனைவரும் யோசிக்கும் போது, அது தவறான எண்ணம் என கருதப்படுகிறது. திருமணமான தம்பதிகள் "விருந்து ஒன்பால்" என்ற முறையில் தான் திருமணத்தின் மகத்துவத்தை உணர வேண்டும். "விருந்து ஒன்பால்" என்றால், விருந்துகளை வழங்குதல் என்று பொருள்படும். பெரியவர்கள் மற்றும் சான்றோர்கள், விருந்துகளை வழங்கி, அவர்களிடமிருந்து நல்ல ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே திருமண தர்மத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இதற்கு பிறகு, தன்னுடைய குடும்ப வளர்ச்சிக்கு பிள்ளை பெறுதல் முக்கியமானதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (13.05.2025)!

அடுத்த கட்டுரையில்