Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மனுக்குரிய மாதமான ஆடி செவ்வாய்க்கிழமை வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:21 IST)
பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும். ஆடி மாதங்களில் வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.


ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து சிவப்பு நிற ஆடையணிந்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வாசனை மலர்கள், செந்நிற மலர் அல்லது செண்பக மலர்கள் சாற்றி தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு படைத்து அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும்.

குறிப்பாக காலை 8-9 மணி வரையான சுக்கிர ஓரை மற்றும் மதியம் 3 - 4.30 வரையான ராகு வேளையில் வழிபட வேண்டும். இயன்றவர்கள் அன்னதானம் மற்றும் சிகப்பு துவரை தானம் செய்யலாம்.

சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் கொடுக்க வேண்டும். இதனால் ஜாதகத்திலுள்ள செவ்வாய் தோஷம் நீங்கும்.

திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். ரத்த சம்பந்தமான பதினாறு பேறும் கிட்டும். ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் ராகு/கேது சம்பந்தத்தால் ஏற்படும் இன்னல்கள் தீரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நிம்மதி அளிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(18.09.2024)!

புனித மாதம் புரட்டாசி.. புரட்டாசி மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம்..!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மீனம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்!

புரட்டாசி மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மகரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments