Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும்- கெய்ல்

Webdunia
வியாழன், 24 மே 2018 (20:32 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போல, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ், வங்காளதேசத்தில் டி20 பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய வீரர்களை தவிர அனைத்து நாட்டின் வீரர்களும் கலந்து கொள்வார்கள்.
 
இந்த தொடர்களில் இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி தருவதில்லை. இதனால் இந்தியாவில் உள்ள திறமையான வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாடுவதில்லை.
 
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல், இந்தியாவில் சிறப்பாக விளையாட கூடிய நிறைய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்றால் அவர்கள் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments