Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை!

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (21:52 IST)
இன்று நடைபெற்று வரும் 34வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணி மோதி வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. எனவே டெல்லி அணி வெற்றி பெற 169 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை அணியை சேர்ந்த க்ருணால் பாண்ட்யா 37 ரன்களும், டீகாக் 35 ரன்களும், ஹிருத்திக் பாண்ட்யா 32 ரன்களும், ரோஹித் சர்மா 30 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை சேர்ந்த ரபடா 2 விக்கெட்டுக்களையும், மிஸ்ரா, அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது
 
இன்னும் சில நிமிடங்களில் 169 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங் செய்யவுள்ளது. இரண்டு அணிகளும் 10 புள்ளிகள் பெற்றுள்ளதால் இன்று வெற்றி பெறும் அணி, சென்னையை அடுத்து இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments