Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை..அது என் ஆசீர்வாதம் - ஆஸ்திரேலிய வீரர்

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:14 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படாது குறித்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் பாசிட்டிவ் ஆக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-2021 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுமார் 30க்கும்மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பிசிசிஐ ஐபிஎல் வீரர்களின் நலனில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார். இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன்ரிச்சட்சன்  சமீபத்தில்  ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினர்.

அத்துடன் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்ல விமானச் சேவை மே  15 ஆம் தேது வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் லாபஸ்சேன் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, நடப்பு ஐபிஎல்-ல் நான் விளையாடாததை ஆசீர்வாதமாக எடுக்கிறேன். இந்தியாவில் தற்போதைய சூழல் நன்றாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments