Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் தொலைந்துவிட்டால் ரூ.50 கட்டணத்தில் புதிய அசல் ஆதார் அட்டை: விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்

Aadhaar
Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (10:55 IST)
ஆதார் அட்டை தொலைந்து விட்டால், . ரூ.50 கட்டணம் செலுத்தி இந்த புதிய அட்டையை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

 

 
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநல திட்டங்களுக்கான பண பலன்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இந் திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் யுஐடிஏஐ நிறுவனம், ஆதார் கார்டு தொலைந்து போனால், ரூ.50 கட்டணத்தில் அசல் ஆதார் அட்டையை வழங்கும் சேவையை சோதனை முயற்சியில் தொடங்கியுள்ளது.
 
புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை சொடுக்கி, புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.50 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வீட்டுக்கே வந்து சேரும். இது மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறைகள் ஏதேனும் இருப்பின், பின்னாட்களில் சரி செய்யப்படுமாம்.
 
தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேருக்கு (93.6 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments