Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.

Advertiesment
telegram
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டெலிகிராம் ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பை போலவே இந்த டெலிகிராம் ஆப்பையும் பலரும் பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பலவற்றையும் பகிர முடியும்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு நடக்கவிருந்தபோது அதன் வினாத்தாள் டெலிகிராம் மூலம் லீக் ஆனதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்
. எனவே, மீண்டும் கடந்த ஜூன் 21ம் தேதி நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது மீண்டும் வினாத்தாள் கசியாமல் இருப்பதற்காக 22ம் தேதி வரை டெலிகிராம் ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இது டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில்தான், நேற்றோடு தடை முடிந்து விட்ட நிலையில் இன்று காலை முதல் டெலிகிராம் செயலி இந்தியாவில் செயல்பட தொடங்கியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ரஜினி!.. அதுதான் காரணமா?..