Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைந்து போன இந்திய விண்கலம் நிலைவை சுற்றி வருகிறது: நாசா தகவல்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (19:10 IST)
2009 ஆம் ஆண்டு தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. 


 

 
இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.
 
இந்நிலையில் தற்போது சந்திராயன்-1 விண்கலம் தொலைந்து போகவில்லை என நாசா தெரிவித்துள்ளது. மேலும் சந்திராயன்-1 விண்கலம் சந்திர மேற்பரப்புக்கு 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விதிக்கப்பட்ட சுற்றுப்பாதையை கடந்து வேறு சுற்றுப் பாதையில் விண்கலம் சுற்றினால் அதனுடன் தொடர்பு கொள்வது இயலாமல் போகலாம். இஸ்ரோ சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பை இழந்தத்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments