Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழுகாச்சி அஸ்திரத்தை கையிலெடுத்த அன்புமணி: தருமபுரி கதறல்...

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:56 IST)
பாமக வேட்பாளர் அன்புமணி தேர்தல் பிரச்சாரத்தின் போது கதறி கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
101% அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிட கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. 
 
இது மக்களுக்கு மட்டுமின்றி சொந்த கட்சியினருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஒரு சிலர் கட்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது பாமக துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார்.
இந்நிலையில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அன்புமணி மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தருமபுரி மக்கள் என் மீது நிறைய பாசம் வைத்துள்ளனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைக்க கடமைப்பட்டிருக்கேன் என சொன்னவாறே கதறி அழுதார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஐயா அழாதீங்க ஐயா என்று கத்தினார்கள். இதையடுத்து அவர் அழுகையை கட்டுப்பட்டுத்திக் கொண்டு மீண்டும் பேச்சை தொடங்கினார்.
 
இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தேர்தல் நெருங்குவதும் போதும், இந்த அரசியல்வாதிகளின் டிராமாக்களும் போதும்டா சாமி என கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments