Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் வீட்டில் ரெய்டு ஏன் ? –பொங்கியெழும் பொன்னார் !

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:04 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்துள்ள வருமான வரி சோதனைக் குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல்   8:30 வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனை முடிவடைந்ததை அடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அதில் ’என் மகன் கதிர் ஆனந்தின் தேர்தல் வெற்றியை திசை திருப்பவே இந்த ஐடி சோதனை’ என்றார். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை துரை முருகன் மறுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளின் உதவியுடன் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி பழிவாங்கும் போக்கில் நடந்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தோல்வி பயத்தாலேயே பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘அவர்கள் பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள். அதைத் தடுத்தால் தேர்தல் தோல்வி பயம் என்று கூறுவார்கள். அவர்கள் பணப்பட்டுவாடா பண்ணும் போது அதைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. என் தொகுதியான கன்னியாகுமரியிலும் அவர்கள் வாக்குக்குப் பணம் கொடுத்து வருகிறார்கள். அதனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments