Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கோட்டையில் இருந்து விலகிய பிரியங்கா காந்தி: தோல்வி பயமா?

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (13:15 IST)
பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிடாதது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
 
பிரியங்கா காந்தி மோடியின் சொந்த தொகுதியும், மோடியின் கோட்டையுமான வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போகிறார் என கூறப்பட்டது. அதெற்கேற்றாற் போல பிரியங்காவும் கட்சி மேலிடம் கூறினால் நான் போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.
 
ஆனால் தற்போது வாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதற்கு பதில் கடைசி முறை வாரணாசியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்படுகிறார்.
 
இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாரணாசி மோடியின் கோட்டை. கடந்த தேர்தலின் போதே மோடி 5 லட்சம் வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தார். கிட்டதட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். தற்போதும் வாரணாசியில் மோடியின் அலை பலமாக வீசுகிறது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் மோடி வாரணாசியில் ஜெயிப்பது உறுதியாகிவிட்டது.
 
ஆகவே பிரியங்கா காந்தியை நிப்பாட்டி தோல்வியை சந்திக்க விரும்பாத காங்கிரஸ், மாற்று வேட்பாளரை முன்னிறுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments