Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகம் வரும் ராகுல் – தேசிய தலைவர்கள் கவனத்தை ஈர்த்த தேனி !

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (14:13 IST)
கடந்த மாதம் தமிழகம் வந்த ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிர்ச்சாரத்திற்காக தமிழகம் வர இருக்கிறார். இம்முறை தேனி தொகுதியில் கவனம் செலுத்த இருப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பாஜகவும் இழந்த செல்வாக்க மீட்க காங்கிரஸும் போட்டி போட்டு வருகின்றனர். இதற்காக மோடி, ராகுல் காந்தி என இருக் கட்சி தலைவர்களும் தமிழகத்திற்கு சில முறை வந்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 12 ஆம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வர இருக்கின்றார். இதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உறுதி செய்துள்ளார்.

இந்த திடீர் முடிவுக்கு தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பலவீனமாக இருப்பதாலும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய மோடி தேனிக்கு வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments