Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, திங்கள், 1 டிசம்பர் 2025 (09:52 IST)
இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 86 ஆயிரத்தையும் தாண்டி உச்சத்திற்கு சென்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 320 புள்ளிகள் உயர்ந்து, 86,033 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து, 26,290 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, இண்டிகோ, ஐடிசி, சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!