ஒட்டுமொத்தமாய் 1,054 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (12:45 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,054 புள்ளிகள் சரிந்து 55,192 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஏராளமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உள்ள அனைத்து பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 54,041 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதே போல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 16,203-க்கு வர்த்தமானது.
 
இதனைத்தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,054 புள்ளிகள் சரிந்து 55,192 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து 16,527-க்கு வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தள்ளிப்போகிறதா தமிழக சட்டசபை தேர்தல்?.... தேர்தல் கமிஷனர் ஆலோசனை!...

நல்லக்கண்ணுவுக்கு முழு அரசியல் மரியாதை!.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

இறப்புக்கு பின்னரும் வாழும் நல்லக்கண்ணு!.. தலைவர்கள் நெகிழ்ச்சி..

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!..

மருத்துவமனையில் நல்லக்கண்ணு!.. விஜய் செய்த சிறப்பான சம்பவம்...

அடுத்த கட்டுரையில்
Show comments