Publish Date: Fri, 25 Nov 2022 (09:54 IST)
Updated Date: Fri, 25 Nov 2022 (09:56 IST)
பங்குச்சந்தை நேற்று சுமார் 700 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று பங்கு சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது.
நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும், நல்ல லாபத்தை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதும், ஏற்ற இறக்கமின்றி நேற்றைய நிலையிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 62260 என்றும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 18 ஆயிரத்து 485 என்றும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.