Publish Date: Fri, 14 Oct 2022 (09:32 IST)
Updated Date: Fri, 14 Oct 2022 (09:33 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக பங்குச்சந்தை உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1040 புள்ளிகள் உயர்ந்து 58300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 17300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரத்தில் மூன்று நாட்கள் பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று திடீரென ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது