Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

Advertiesment
share

Siva

, புதன், 14 மே 2025 (09:36 IST)
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நேற்று லாபத்தை அதிகமாக புக் செய்ததால் பங்குச்சந்தை சரிந்தது. சென்செக்ஸ்  1200 புள்ளிகள் வரை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 81,400 என வர்த்தகமாகி வருகிறது.  அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 24,680 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், டாட்டா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், ஹெச்டிஎஃசி வங்கி, சிப்லா, ஆசியன் பெயிண்ட், உள்ளீட்டா பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!