Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. 72 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்..!

share
, புதன், 27 டிசம்பர் 2023 (10:55 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருப்பது  முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 440 புள்ளிகள் உயர்ந்து 71,782 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 138 புள்ளிகள் உயர்ந்து 21,579 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இந்த வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மேலும் முதலீடு செய்ய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் பங்குச்சந்தை நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று தகுந்த நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை.. அதிமுகவை மீட்பதே குறிக்கோள்! – ஓ.பன்னீர்செல்வம் உறுதி!