Publish Date: Fri, 22 Dec 2023 (11:18 IST)
Updated Date: Fri, 22 Dec 2023 (11:20 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை படுமோசமாக இறங்கியது. இதனை அடுத்து நேற்று ஓரளவு ஏற்றம் கண்ட நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
இன்று பங்குச்சந்தை மும்பை சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 196 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 122 புள்ளிகள் உயர்ந்து 21,377 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.