Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் பிரசாதத்தால் மீண்டும் பலி! கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (07:18 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் 17 பேர் பலியாகிய அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் அம்மாநில மக்கள் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அதே கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட ஒரு பெண் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக தலைநாகர் பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லபுரா மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இந்த நிலையில் கவிதா என்பவர் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் நேற்று இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். கோவில் வழிபாடு முடிந்ததும் கோவிலுக்கு வெளியே மூன்று பேர் கொடுத்த பிரசாதத்தை கவிதா குடும்பத்தினர் வாங்கி சாப்பிட்டனர். 
 
பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் கவிதா உள்பட அவரது குடும்பத்தினர் 10 பேர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய உறவினர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 
இது குறித்து கோவில் நிர்வாகம் விளக்ககமளித்தபோது, 'கோவில் சார்பாக யாருக்கும் பிரசாதம் வழங்கப்படவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் ஒருசிலர் பிரசாதம்  வழங்கியதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவில் வெளியே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments