Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலாக்கு சென்று கொண்டிருந்த பஸ் விபத்து- 10 பேர் பலி

Webdunia
திங்கள், 21 மே 2018 (13:11 IST)
மத்திய பிரதேசம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து அகமதாபாத்துக்கு தனியார் பேருந்தின் மூலம் பலர் சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து மத்திய பிரேதசம் மாநிலம் குணா மாவட்டத்திற்கு வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விழிப்புணர்வு இல்லாமல் வாகனம் ஓட்டுவதால் இது போன்ற விபத்துகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments