Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை - மோடி பெருமிதம்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:02 IST)
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மேலும் ஐந்து நாட்களில் 1.5 கோடிச் சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு நன்றி என்றும் பிரதமர் கூறினார். கொல்கத்தா சித்தரஞ்சன் புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை காணொலியில் திறந்து வைத்த போது பிரதமர் நரேந்திர மோடி இதனை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments