Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: உடனடியாக மூடப்பட்ட பள்ளி!

virus
Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:55 IST)
கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அந்த பள்ளி உடனடியாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உடனடியாக பள்ளி மூடப்பட்டதாகவும் பள்ளி வளாகம் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மீண்டும் பள்ளி திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments