Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா? பரிதாப நிலையில் காங்கிரஸ்!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (16:50 IST)
மத்திய பிரதேசத்தில் 19 பேர் ராஜினாமா செய்த நிலையில் மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது.  
 
காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.   
 
இந்த சம்பவம் கடந்த வாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று ஜோதிராதித்யா சிந்தியா மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.   
 
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த 19 பேரும் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் என தெரிகிறது.   
 
இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகிய காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதனால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மேலும் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments