Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 கோடி உண்டியல் வசூல் - திருப்பதியில் அதிகபட்ச வசூல்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (13:00 IST)
பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலான நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 
 
இதனிடையே திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினசரி 30,000 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். திருப்பதியில் நேற்று 28,513 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் ரூ.3.01 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
 
பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலான நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments