Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுத்து கொலை: டெல்லியில் பரபரப்பு

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (21:52 IST)
டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியின் பிசியான பகுதிகளில் ஒன்றான கண்டோன்மெண்ட் பகுதியில் இன்று 30 வயது பெண் ஒருவர் பிசியோதரபி செய்வதற்காக மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
 
பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
பின்னர் அந்த பெண் குறித்த முதல்கட்ட விசாரணையில் அவர் ராணுவ தளபதி ஒருவரின் மனைவி என்பது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments