Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல்குளத்தில் 300 கிலோ போலித் தங்கம் – 40,000 பேரை ஏமாற்றிய தொழிலதிபர் !

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:01 IST)
மோசடி செய்த தொழிலதிபரைக் கைது செய்ய போலிஸார் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ போலி தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.எம்.ஏ எனும் வர்த்தக நிறுவனம் பொன்ஸி எனும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் போலியானத் தங்கக்கட்டிகளைக் காட்டி 40,000 வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளனர். இது சம்மந்தமாகப் போலிஸுக்குப் புகார் வரவே அந்நிறுவனத்தின் அதிபர் மன்சூர் கான் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து ஐ.எம்.ஏ க்ரூப்பின் இயக்குனர்கள் அதிகாரிகள் என 25 பேரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளையும் முடக்கியுள்ளனர். இதனிடையே இந்தியா வந்த மன்சூர் கானை டெல்லி விமானநிலையத்தில் கைது செய்த அமலாக்கத்துறை அவரது வீட்டில் சோதனை நடத்திய போது அங்குள்ள நீச்சல்குளத்தில் 300 கிலோ போலித் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments