Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது குழந்தையை ரூ.4.5 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி திருமணம்.. 38 வயது நபர் மீது வழக்குப்பதிவு..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (07:34 IST)
ஏழு வயது குழந்தையை ரூபாய் 4.5 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம்  செய்த 38 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் பூபால் சிங் என்ற 38 வயது நபர் சமீபத்தில் ஏழு வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் அவரது வீட்டில் விசாரணை செய்தபோது அவர் சிறுமியின் பெற்றோருக்கு 4.5 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி அதன் பின் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டு திருமணம் செய்த பூபால் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 7 வயது சிறுமியை ரூ.4.5 லட்சத்துக்கு விற்பனை செய்த பெற்றோர்களிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments