Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த 4 வயது சிறுவன்.. சிசிடிவியில் பதிவான பகீர் சம்பவம்

Arun Prasath
திங்கள், 30 செப்டம்பர் 2019 (15:09 IST)
சாலையில் சென்றுகொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன், மழையால் தேங்கிய கழிவு நீர் கால்வாயை தாண்ட முயன்றபோது தவறி விழுந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும், மூடப்படாத ஆள்துளை கிணறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் தவறி விழுந்து சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பல நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இதே போல ஒரு சம்பவம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாலையில் தேங்கிக் கிடந்த கழிவு நீரை ஒரு 4 வயது சிறுவன் தாண்ட முயற்சித்துபோது வழுக்கி கழிவு நீரில் விழுந்தான். பின்பு எழுந்திருக்க முயன்றபோது மீண்டும் வலுக்கி விழுந்ததில் கழிவு நீர் கால்வாயில் மூழ்கினான். உடனடியாக அந்த சாலையில் இருந்த வாலிபர் ஒருவர், அந்த சிறுவனை கால்வாயிலிருந்து தூக்கி காப்பாற்றினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments