Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாவத் புயல் எதிரொலி: 65 ரயில்கள் ரத்து!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:59 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறி இருக்கும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக இந்தியாவில் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது
 
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டணம் வழியாக செல்லும் 65 ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது
 
அதேபோல் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது 
 
ஜாவத் புயல் இன்று வடக்கு கடலோர பகுதியான ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர பகுதியான ஒடிசா ஆகிய பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் அதன் காரணமாக அந்த பகுதியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நபர் வீடு கட்டி வாடகைக்கு விட்டாரா? திருப்பூரில் அதிர்ச்சி..!

எனது உயிருக்கு ஆபத்து: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திடுக் புகார்..!

ஆதார், பான் கார்டு, ரேசன் கார்டு இந்திய குடியுரிமை சான்றிதழ் அல்ல.. மத்திய அரசு அறிவிப்பு

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது: நீதிமன்றம்.

வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு.. பவர் ஸ்டேஷனில் மின்சாரத்தை நிறுத்திய ஊழியர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments