Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் ஆட்டத்தை பார்த்து தீக்குளித்த முதியவர்!

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (14:21 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனதால் 65வயது ரசிகர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் வெளியேறினார்.
 
இதனால் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் பைரவா(65) என்பவர் சோகம் தாங்க முடியாமல் தீக்குளித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுலால் பைரவா காயங்களுடன் உயிர் பிழைத்தார். தீக்குளித்த விவகாரம் குறித்து விசாரித்த காவல்துறையினரிடம் பாபுலால் கூறியதாவது:-
 
நான் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன். வீட்டில் யாரும் இல்லை. கோலி அவுட் ஆனதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸார் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments