Webdunia - Bharat's app for daily news and videos

Install App

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (21:03 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி இன்று மயக்கமடைந்த  நிலையில் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சோஹூர் அருகேயுள்ள மூங்வாலி என்ற கிராமத்தில் வீட்டின் அருகில் சிறுவர் மற்றும் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, 2 வயது சிறுமி ஒருவர் எதிர்பாரா விதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்க போராடினர்.

குழந்தை ஆழ்துளை கிணற்றின் அடியில் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாக குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஆழ்துளை கிணற்றின் அருகில் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுமியை 50 அடியில் பத்திரமாக மீட்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறுமிக்கு ஆக்சிஜன் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்புத் துறையினருடன் தேசிய பேரிடன் மீட்புக் குழுவினர்  இப்பணியில் இறங்கினர்.

100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்த நிலையில், இரவு பகல் பாராமல் மீட்பு பணிமேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சுமார்  மணி நேர போராட்டத்திற்குப் பின், அக்குழந்தை மயக்கமடைந்த நிலையில், மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கடும் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments