Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலி

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:05 IST)
மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி இருந்து வந்தார்.
 
இந்நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த குருநாத் வாமன் லாஸ்னி, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு டிராவல்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குருநாத் காரின் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், குருநாத் சம்பவ இடத்திலே பலியானார்.
 
விபத்தை ஏற்படுத்திய டிராவல்ஸ் டிரைவர் தலைமறைவானார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குருநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments