Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' உடனே ஒரு சகோதரன் வேண்டும்'' - மகளுக்காக குழந்தையை கடத்திய தம்பதி கைது!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:37 IST)
சலையோரமாக வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி வந்தது தொடர்பாக சஞ்சய் –அனிதா தம்பதியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சலையோரமாக வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி வந்தது தொடர்பாக  சஞ்சய் –அனிதா தம்பதியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் வசித்து வரும் சஞ்சய்-அனிதா தம்பதியர்க்கு ஒரு மகள் உள்ளார். இவர்களின் மகன் கடந்த ஆண்டு உயிரிழந்ததால் இதுபற்றிய சோகத்தில் அவர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்ட  ஒரு சகோதரன் வேண்டும் என்று சஞ்சயின் மகள் அடம்பிடித்திருக்கிறாள். எனவே, சஞ்சய்- அனிதா தம்பதியர், சாலையோரம் வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்.

தங்கள் குழந்தையைக் காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் சஞ்சய் மற்றும் அவரது மனைவி குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments