Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை.. 18 மணி நேர போராட்டம்! - உயிருடன் கொண்டு வந்த மீட்பு படையினர்!

Borewell
Prasanth Karthick
வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:47 IST)

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

 

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள டௌசா என்ற பகுதியில் நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக அருகே இருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 

 

உடனடியாக அந்த இடம் விரைந்த மீட்பு படையினர் குழந்தையை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர். குழந்தை 35 அடி ஆழத்தில் சிக்கியதாக கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து குழந்தை ட்யூப் வழியாக ஆக்ஸிஜன் சுவாசம் அளித்துக் கொண்டே குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

இதற்கு முன் இதுபோல ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை வெற்றிகரமாக மீட்ட கிஷன்கர் பகுதியை சேர்ந்த தேசிய மீட்புப்படை குழுவினரும் அந்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் 18 மணி நேரம் கழித்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments