Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை பழிதீர்க்க 3 வயது மகளை கற்பழித்த தந்தை

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (08:12 IST)
டெல்லியில் மனைவி மீது உள்ள கோபத்தில் தந்தை 3 வயது குழந்தையை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபர் மனைவியிடம் அவ்வப்போது சண்டையிடுவார்.
 
அதே போல் நேற்று முன் தினம் தனது மனைவியிடம் அவர் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
 
மனைவி வெளியே சென்ற ஆத்திரத்தில், அந்த கொடூரன் குடித்துவிட்டு தனது 3 வயது மகளை சீரழித்துள்ளான். சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மனைவி குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
 
இதையடுத்து புகாரின்பேரில் அந்த கொடூர அப்பனை கைது செய்த போலீஸார், அவன் மீது போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments