Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தொண்டரின் சபதம்: 670 கி.மீ சைக்கிளில் பயணம்

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (18:16 IST)
பாஜக வெற்றிபெற வேண்டுமென சபதம் எடுத்த வயதான தொண்டர் ஒருவர் அதில் வெற்றிப்பெற்றதற்காக குஜராத்திலிருந்து சைக்கிளிலேயே பயணித்து வந்து மோடியை சந்தித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அமரேலியை சேர்ந்தவர் கிம்சந்த் சந்த்ராணி. வயதான இவர் பல காலமாக பாஜகவின் அடிமட்ட தொண்டனாய் இருந்து வருபவர். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றால் சைக்கிளில் பயணித்து டெல்லி சென்று மோடியை சந்திப்பதாக சபதம் எடுத்தார்.

தற்போது பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அதன் பொருட்டு தனது சபதத்தை நிறைவேற்றுவதற்காக குஜராத்திலிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். 17 நாளில் 670 கி.மீ பயணித்து டெல்லிக்கு வந்து மோடியை சந்தித்துள்ளார். அவரது மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். அடுத்து அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கிம்சந்த் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இன்று நடப்பு அதிமுக எம்.எல்.ஏ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

பத்திரிகைகளில் பெயர் வரவே வக்பு விவகார மனுக்கள் தாக்கல்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இயக்குனர் கெளதமன் மகனை கைது செய்த போலீசார்.. என்ன காரணம்?

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments