Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வழக்கறிஞரை கற்பழித்த நீதிபதி கைது

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (09:56 IST)
தெலுங்கானாவில் நீதிபதி ஒருவர் பெண் வழக்கறிஞரை காதல் வலையில் சிக்க வைத்துப் ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையை சேர்ந்தவர் மல்லிகா. இவர் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். அதே நீதிமன்றத்தில் நாராணராவ் என்பவர் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் ஒரே நீதிமன்றத்தில் பணிபுரிந்த மல்லிகாவிற்கும் நாராணராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. நாராண ராவ் மல்லிகாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி அவரை பலமுறை கற்பழித்துள்ளார்.
 
இதற்கிடையே  நாராணராவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதை அறிந்த மல்லிகா அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து நாராணராவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ மல்லிகாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
 
இதனையடுத்து மல்லிகா காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் நீதிபதி நாராணராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஒரு நீதிபதியே இப்படி கீழ்த்தரமாக் நடந்து கொண்டிருப்பது தெலுங்கானா மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments